தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் படம் 'வாடிவாசல்' என கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தனர். செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை மையப்படுத்தி இப்படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்காக ஜல்லிக்கட்டு காளை உடன் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் சூர்யா.
ஆனால் இந்த படத்தை அறிவித்த பிறகு வெற்றிமாறன் விடுதலை 1, 2 படங்களை இயக்கியுள்ளார். அதேப்போல் சூர்யா நடிப்பில் இரண்டு படங்கள் முடிந்து ஒரு படம் வெளியாகிவிட்டது. இதனால் வாடிவாசல் படம் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இந்தாண்டு துவக்கத்தில் இதன் டெஸ்ட் ஷூட் நிறைவு பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை 2025ம் ஆண்டு மாட்டு பொங்கல் அன்று வெளியிட முடிவு செய்துள்ளனர். மேலும், இதன் படப்பிடிப்பு 2025ல் மார்ச் அல்லது ஏப்ரலில் துவங்கும் என்கிறார்கள்.