மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடித்துள்ள புஷ்பா 2 படம் டிசம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வந்தது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள சந்தியா என்ற தியேட்டரில் புஷ்பா- 2 படத்தின் சிறப்பு காட்சி பார்க்க சென்ற ரேவதி என்ற ஒரு ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார் . அவருடைய மகன் தேஜ் என்பவர் படுகாயம் அடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், புஷ்பா-2 படம் பார்க்க தியேட்டருக்கு வந்த ரசிகை உயிரிழந்திருப்பது படக்குழுவுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக படத்தின் கொண்டாட்டம் நிகழ்ச்சிகளில் நாங்கள் பங்கேற்கவில்லை. ரேவதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குகிறேன். அதோடு புஷ்பா -2 பட குழுவினர் ரேவதியின் குடும்பத்திற்கு உதவி செய்ய தயாராக உள்ளார்கள். விரைவில் அவரது குடும்பத்தாரை நேரில் சந்திக்க உள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார் அல்லு அர்ஜுன்.