தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் முதல் நாள் வசூல் 294 கோடி, இரண்டாம் நாளில் 449 கோடி, மூன்றாம் நாளில் 621 கோடியாக வசூலித்தது. நேற்று ஞாயிறு விடுமுறை நாளில் இப்படத்தின் வசூல் உயர்ந்து அதிகமாக வசூலித்துள்ளது. அதன்படி 800 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதல் மூன்று நாள் வசூலை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தது பட நிறுவனம். அது மட்டுமல்ல இரண்டரை நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்தும் சாதனை படைத்தது. கடந்த நான்கு நாட்களாக இப்படத்திற்கான வரவேற்பு எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருக்கிறது. இன்று திங்கள் கிழமை வார நாளின் முதல் நாள் என்பதால் வசூல் குறைய வாய்ப்பி இருக்கிறது. இருந்தாலும் அடுத்த சில நாட்களில் இப்படம் 1000 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லா மாநிலங்களிலும் நன்றாக ஓடினாலும் கேரளாவில் மட்டும் எதிர்பார்த்த வசூலைத் தராதது ஆச்சரியமாக உள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழில் எதிர்பார்த்ததை விடவும் அதிகம் வசூலித்து வருகிறது என்றும் டப்பிங் படங்களின் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்றும் சொல்கிறார்கள்.