நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் முதல் நாள் வசூல் 294 கோடி, இரண்டாம் நாளில் 449 கோடி, மூன்றாம் நாளில் 621 கோடியாக வசூலித்தது. நேற்று ஞாயிறு விடுமுறை நாளில் இப்படத்தின் வசூல் உயர்ந்து அதிகமாக வசூலித்துள்ளது. அதன்படி 800 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதல் மூன்று நாள் வசூலை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தது பட நிறுவனம். அது மட்டுமல்ல இரண்டரை நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்தும் சாதனை படைத்தது. கடந்த நான்கு நாட்களாக இப்படத்திற்கான வரவேற்பு எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருக்கிறது. இன்று திங்கள் கிழமை வார நாளின் முதல் நாள் என்பதால் வசூல் குறைய வாய்ப்பி இருக்கிறது. இருந்தாலும் அடுத்த சில நாட்களில் இப்படம் 1000 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லா மாநிலங்களிலும் நன்றாக ஓடினாலும் கேரளாவில் மட்டும் எதிர்பார்த்த வசூலைத் தராதது ஆச்சரியமாக உள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழில் எதிர்பார்த்ததை விடவும் அதிகம் வசூலித்து வருகிறது என்றும் டப்பிங் படங்களின் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்றும் சொல்கிறார்கள்.