பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் 45வது படத்தின் படப்பிடிப்பு கோயம்பத்தூரில் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் என்ற அறிவிப்பு வெளிவந்தது.
கடந்த சில நாட்களாகவே இப்படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகுவார் என்ற தகவல் வந்து கொண்டிருந்தது. இப்படத்திலிருந்து ரஹ்மான் திடீரென விலகவில்லையாம். அவரை ஒப்பந்தம் செய்யும் போதே தனக்கு நிறைய படங்கள் இருப்பதாகவும், அதனால், இப்படத்தில் பணிபுரிய வாய்ப்பில்லை என்றே சொன்னாராம். இருப்பினும் அவரை எப்படியோ சம்மதிக்க வைத்துள்ளார்கள்.
இதனிடையே, அவருடைய திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டதால் அவர் விலகுகிறேன் என்று சொன்னதும் தயாரிப்பு நிறுவனமும் மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டார்கள் என்பது தகவல். ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படங்களை முடித்துக் கொடுக்க மட்டுமே ஏஆர் ரஹ்மான் தற்போது முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். புதிய படங்களை தற்போதைக்கு ஏற்க அவர் விரும்பவில்லை என்கிறார்கள்.