ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

இப்போதெல்லாம் திரைப்படங்கள் சில பாகங்களாக வெளிவருது டிரண்டாகி உள்ளது. அதிலும் குறிப்பாக இரண்டாம் பாகம் முதலிலும், முதல் பாகம் பிறகும் வெளிவருவதும் அதிகரித்துள்ளது. 2022ல் வெளியான 'காந்தாரா' படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், அதன் முன் பகுதி, 2வது பாகமாக தயாராகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளிவருகிறது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார், இந்தப் படத்தை இயக்கி உள்ளார். விக்ரமுடன் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் மளிகைக்கடை நடத்தி வரும் விக்ரம், பெண் குழந்தையை பாசமுடன் கவனித்துக் கொள்வது போல முதல் காட்சி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து துஷாரா விஜயனுடன் விக்ரம் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இடம்பெறுகிறது. அடுத்த ஒரு முக்கியமான சம்பவம் நடக்கிறது. அது போலீஸ் விசாரணையில் உள்ளது. விக்ரமுடன் போலீஸ் அதிகாரி எஸ்.ஜே.சூர்யா மோதுகிறார்.
இந்த டீசரின்படி கிராமத்தில் பலசரக்கு கடை நடத்தும் விக்ரமின் மகளுக்கு ஏதோ நிகழ்கிறது. அதற்காக விக்ரம் பழிவாங்குகிறார். அடுத்து வெளிவரும் முதல் பாகத்தில் விக்ரம், யார்? எங்கிருந்து அந்த ஊருக்கு வந்தார் என்பதாக இருக்கும் என தெரிகிறது.