ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1940 மற்றும் 50களில் தமிழ், ஹிந்தி படங்களைத் தயாரித்து, இயக்கி, நடித்து வந்தவர் மும்பையைச் சேர்ந்த பாக்வன். இவரை 'பாக்வன் தாதா' என்றும் சொல்வார்கள். 1940ம் ஆண்டு அவர் இயக்கிய தமிழ் படம்தான் 'ஜயக்கொடி'. இந்த படத்தில் கே.டி.ருக்மணி, கே.நடராஜன் நடித்திருந்தார்கள். பி.வி.சாமி, எஸ்.ஆர்.சாரங்கன் வசனங்களை எழுதினர். அஹமத்துல்லா ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு சி.ராமச்சந்திரா இசை அமைத்தார். பாடல்களை சி.முருகேசன் எழுதினார்.
படத்தின் கதை இதுதான்: வரதட்சணை கொடுக்க முடியாததால் ஏழைப்பெண் ராஜத்துக்கு (ருக்மணி), திருமணமாகவில்லை. இதற்கிடையே பண ஆசை கொண்ட கந்துவட்டிக்காரன், ராஜமின் தந்தையைக் கொன்று வீட்டுக்கு தீ வைக்கிறான். இதனால் ஆவேசம் கொள்ளும் ராஜம், வரதட்சணைக்கு எதிராகக் களமிறங்குகிறாள். வரதட்சணை கேட்கும் மணமகன்கள் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள்.
வரதட்சணையால் பாதிக்கப்பட்ட ராஜம் தனது பெயரை (ஜெ)ஜயக்கொடி என்று மாற்றிக் கொண்டு பெண் தீவிரவாதியாகி வரதட்சணை கேட்கிறவர்களுக்கு தானே தண்டனை தருவதுதான் படத்தின் கதை. பிற்காலத்தில் வந்த 'நான் சிவப்பு மனிதன்', 'சட்டம் ஒரு இருட்டரை' போன்ற படங்களுக்கு இதுதான் முன்னோடி. படத்தின் கதையை பார்த்து மக்கள் மிரண்டு போனார்கள். ருக்மணி அதிரடி ஆக்ஷன் ஹீரோயின் ஆனார். நாயகனாக நடித்த கே.நடராஜன் பின்னர் ஜயக்கொடி நடராஜன் ஆனார்.