'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், பஹத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் ‛வேட்டையன்'. கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. படத்திற்கு எழுந்த எதிர்மறை விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதித்தது.
இதுபற்றி ஞானவேல் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சினிமா படத்திற்கான நியாயமான விமர்சனங்கள் குறைந்துவிட்டன. வேட்டையன் படம் மோசம் என முதல்நாளில் இருந்தே சொல்ல ஆரம்பித்தனர். இதனால் படம் பார்ப்பவர்கள் மனநிலையும் அப்படி மாறிவிடுகிறது. அந்தவகையில் வேட்டையன் படத்திற்கு கள்ளிப்பால் கொடுத்து விட்டனர். படத்தில் நடிக்கும் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அதை குறை கூற வேண்டும் என்ற நோக்கில் தான் இப்போது விமர்சனங்களை முன் வைக்கின்றனர்'' என தெரிவித்துள்ளார்.