ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
1940களில் ஏராளமான பாடகிகள் திரைப்பட நடிகை ஆனார்கள். பாடும் திறனோடு அழகான தோற்றமும் இருந்தால் சினிமா வாய்ப்பு உறுதி என்பது அப்போதிருந்த நிலை. அப்படி அந்த காலத்தில் பாடி நடித்துக் கொண்டிருந்தவர் பி.ஏ.ராஜாமணி. அக்காவிற்கு துணையாக கச்சேரிக்கும், சினிமா படப்பிடிப்புக்கும் சென்றவர் பி.ஏ.பெரிய நாயகி. கடலூர், பண்ருட்டி வட்டத்தில் உள்ள திருவதிகை என்ற ஊரில் பிறந்தவர். பெரிய நாயகியின் தாயார் ஆதிலட்சுமி, 'பண்ருட்டி அம்மாள்' என்ற பெயருடன் கர்நாடக சங்கீதப் பாடகியாக இருந்தார்.
1940ல் வெளியான 'விக்ரம ஊர்வசி அல்லது ஊர்வசியின் காதல்' என்ற படத்தில் பெரியநாயகியின் அக்கா பி.ஏ.ராஜாமணிக்கு நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதே படத்தில் காந்தர்வக் கன்னியாகச் சிறு வேடத்தில் பாடி நடிக்கும் வாய்ப்பு பி.ஏ.பெரியநாயகிக்கு அமைந்தது. பின்னர் லேனா செட்டியார் தயாரிப்பில் டி.ஆர்.ரகுநாத் இயக்கிய 'பிரபாவதி' படத்திலும் இணைந்து சிறு வேடங்களில் நடித்தார்.
1945ம் ஆண்டு, டி.ஆர்.மகாலிங்கம், குமாரி ருக்மணி நடித்த 'ஸ்ரீவள்ளி' படத்தை தயாரித்தார் மெய்யப்ப செட்டியார். படம் முடிந்து முதல் பிரதியைத் திரையிட்டுப் பார்த்தபோது அதிர்ந்துபோனார். டி.ஆர்.மகாலிங்கத்தின் வெண்கலக் குரலுக்கு ஈடுகொடுக்கும் விதமாக குமாரி ருக்மணி பாடியிருந்த பாடல்கள் அமையவில்லை. படப்பெட்டிகள் அனைத்தும் தயாராகி, பிரதிகள் பல ஊர்களுக்கு அனுப்பிவிட்டிருந்த நிலையில் அவை அனைத்தையும் திரும்ப அனுப்ப சொல்லி தகவல் அனுப்பினார்.
அப்போதுதான் மும்பையில் 'போஸ்ட் சிங்க்ரனைசேஷன்' முறையில் பின்னணி பாடும் தொழில்நுட்பம் அறிமுகமாகி இருந்தது. இதை கொண்டு வந்த செட்டியார் படத்தில் ருக்மணி பாடிய அனைத்து பாடல்களையும், பெரிய நாயகியை பாடவைத்து அதையே படத்தில் பின்னணி பாடலாக இணைத்தார். படம் பெரிய வெற்றி பெற்றது, பாடல்களும் பிரபலமானது. பி.ஏ.பெரிய நாயகி முதல் பின்னணி பாடகி ஆனார்.
அதன்பிறகு கீதகாந்தி, பஞ்சாமிர்தம், என் மனைவி, மனோன்மணி, மகாமாயா, பிரபாவதி, கிருஷ்ண பக்தி, தர்மவீரன், ஏகம்பவாணன், ருக்மாங்கதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.