மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ |
நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த 'புஷ்பா 2' படம் மிகப்பெரிய அளவில் வசூலித்து ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் கைவசம், 'குபேரா, கேர்ள்பிரண்ட், சாவா, ரெயின்போ, சிக்கந்தர்' ஆகிய படங்கள் உள்ளன. இதில் குபேரா, கேர்ள்பிரண்ட் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ராஷ்மிகா, இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை 'நான் கதாநாயகியான தருணம்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், 'முந்தைய காலங்களில் நான் மாடல்களையும் நடிகர் நடிகைகளையும் பார்த்து மயங்கிப்போயிருக்கிறேன். நானும் தற்போது அந்த நிலைமையை அடைந்திருப்பதாக நினைக்கிறேன். ஆனால், இதில் முக்கியமானது நமது கடின உழைப்பும் நம்மை அந்தமாதிரி காட்டும் ஆட்களுடன் வேலைசெய்வதும்தான். நிச்சயமாக இதில் எடிட்டிங்கும் பங்கு இருக்கிறது. கேமரா லென்ஸ்க்கு பின்புறம் திறமையான ஆட்கள் வேலை செய்கிறார்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.