ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'சேது' படம் மூலம் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமாகிய இயக்குனர் பாலா, திரையுலகில் நுழைந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது. இதை நேற்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு விழாவாக எடுத்துக் கொண்டாடினார். இது பாலாவின் 25வது வருட கொண்டாட்ட விழாவாகவும் அவர் தற்போது இயக்கி விரைவில் வெளியாகவுள்ள வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவாகவும் சேர்ந்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு இயக்குனர்கள், நட்சத்திரங்கள் வருகை தந்து கலந்து கொண்டார்கள் என்றாலும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது நடிகர்கள் சூர்யாவும் விக்ரமும் வருவார்களா என்பது தான்.
காரணம் பாலாவின் மூலம் திரையுலகில் திருப்புமுனை பெற்ற இவர்கள் இருவரும் தற்போது பாலாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவரிடம் இருந்து பிரிந்து நிற்கின்றனர். குறிப்பாக விக்ரம் மகனை வைத்து பாலா இயக்கிய 'வர்மா' படத்தின் மூலம் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதேபோல சூர்யா தானே தயாரித்து பாலா இயக்கத்தில் நடித்த 'வணங்கான்' திரைப்படத்திலும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார். தற்போது அதற்கு பதிலாக அருண் விஜய் அந்த படத்தில் நடித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் இந்த விழாவில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சூர்யா தனது தந்தை சிவகுமாருடன் சேர்ந்து வந்து கலந்து கொண்டார்; ஆனால் விக்ரம் வரவில்லை.
இந்த நிகழ்வில் வணங்கான் படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. படத்தின் டிரைலர் நன்றாக இருப்பதாக பார்த்த அனைவருமே கூறி வருகிறார்கள். அப்படி டிரைலர் திரையிடப்பட்ட போது அதை பார்த்த சூர்யாவின் முக பாவனைகளை ஸ்கிரீனில் அடிக்கடி காட்டினார்கள். அப்போது சூர்யாவின் முகம் கொஞ்சம் இறுக்கமாக இருந்ததை பார்க்க முடிந்தது. இந்த படத்தின் கதையோ காட்சிகளையோ பெரிய அளவில் தெரியாமல் தான் அந்த படத்தில் பாலா சொல்வதை மட்டுமே கேட்டு சில நாட்கள் நடித்து வந்தார் சூர்யா. அதன்பிறகு முழு ஸ்கிரிப்ட் தெரியாமல் நடிக்க முடியாது என்று கூறித்தான் அவர் விலகியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த டிரைலரை பார்க்கும்போதே படமும் நன்றாக வந்திருக்கும் என்பது போல சூர்யா உணர்ந்ததால் தான் அவரது முகம் மாறியது என்றும் சிலர் சொல்கிறார்கள்.