தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கி பரமன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்தவர் சசிகுமார். பின்னர் நாடோடிகள் , போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, தாரை தப்பட்டை, அயோத்தி என்று பல படங்களில் நடித்த சசிகுமார் தற்போது டூரிஸ்ட் பேமிலி, நந்தன், பகைவனுக்கும் அருள்வாய் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ஹீரோயிசம் என்பதை தாண்டி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதைகளுக்கு சமீபகாலமாக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு இருந்த சசிகுமார் தற்போது சபரிமலை சென்று இருக்கிறார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.