தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

2025ம் ஆண்டு வெளிவந்த படங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படம் 'டூரிஸ்ட் பேமிலி'. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம். அப்படத்தில் இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்திற்கு வந்த குடும்பமாக சசிகுமார் குடும்பத்தின் கதாபாத்திரம் இருந்தது. இலங்கைத் தமிழ் பேசி அந்தப் படத்தில் நடித்திருந்தார் சசிகுமார். தியேட்டர்களில் 50 நாள் ஓட்டம், 90 கோடிக்கும் அதிகமான வசூல் என பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
சசிகுமார் நடித்து அடுத்து நாளை மறுநாள் வெளியாக உள்ள 'ப்ரீடம்' படத்திலும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளார். 80களில் நடக்கும் கதை. அவரது கர்ப்பிணி மனைவி அகதியாக தமிழகம் வந்திருக்க சில மாதங்கள் கழித்து இங்கு வருகிறார் சசிகுமார். இப்படத்திலும் இலங்கைத் தமிழ் பேசித்தான் நடித்துள்ளார்.
அடுத்தடுத்த படங்களில் இலங்கைத் தமிழர் கதாபாத்திரம் என்பது யதேச்சையாக அமைந்ததுதான். 'ப்ரீடம்' படம் எப்போதோ வந்திருக்க வேண்டியது. தாமதமாக வெளிவருகிறது. அதனால்தான் அடுத்தடுத்து இப்படி அமைந்துள்ளது. இலங்கைத் தமிழர் சென்டிமென்ட் சசிக்கு மீண்டும் வெற்றியைத் தருமா என்பது இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.