'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோவாக அறியப்படும் முகேஷ் கன்னா, இந்தியாவின் விடுதலைக்காக போராடிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமது தேசபக்திப் பாடல் தொகுப்பான 'கிராந்திகரி பஹேலி'யின் இரண்டாவது பாடலான 'பஹேலி கீத் 2' என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.
இந்தப் பாடல் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையையும் அவர்களின் வரலாற்றுப் படைப்புகளையும் ஒரு புதிர் வடிவில் காட்டுகிறது. இந்தப் பாடலில், முகேஷ் கன்னா குழந்தைகளுடன் சேர்ந்து புதிர்களைத் தீர்க்கிறார்.
'பஹேலி கீத் 2' பாடலில் சந்திரசேகர் ஆஜாத், வீர் சாவர்கர், மங்கள்பாண்டே, அஷ்பக் உள்ளா கான் ஆகியோரின் கதைகள் இடம்பெறுகின்றன. இந்த பாடல் தொடரின் முதல் பகுதியில், ஜான்சி ராணி லட்சுமிபாய், சஹீத் ராஜ்குரு, சுக்தேவ், பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ், துர்ரம் கான் உள்ளிட்ட வீரர்களின் வாழ்க்கைச் சுருக்கங்கள் இடம்பெற்றிருந்தன.
பாடல் வெளியீட்டு விழாவில் முகேஷ் கன்னா பேசியதாவது: 'ஜெய்ஹிந்த்' இயக்கத்தின் மூலம், நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் கோரி வருகிறோம். இந்த பாடலின் மூலம் நமது உண்மையான ஹீரோக்களை, தேசத்திற்காக இள வயதில் தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களை பற்றி இளைஞர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த இசை தொடர் மூலம் புரட்சியாளர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து, அவர்களின் பெயர்களை நிலைநாட்டுவோம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இதயங்களில் அவர்களின் பெயர்களைப் பதிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.