வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
சத்ய சிவா இயக்கத்தில், சசிகுமார், லிஜோமோள் ஜோஸ் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியாக வேண்டிய படம் 'ப்ரீடம்'. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனை காரணமாக படம் நேற்று வெளியாகவில்லை. நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் சுமூக முடிவு எடுக்கப்படவில்லை. அதனால், இன்றும் படம் வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், படத்தை ஒரு வாரத்திற்குத் தள்ளி வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
பைனான்சியரிடமிருந்து தயாரிப்பாளர் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து 5 கோடி வரை வந்துவிட்டதாம். அதில் 2 கோடியாவது தாருங்கள் என பைனான்சியர் தரப்பில் கேட்டதாகத் தகவல். அந்தப் பணத்தையும் தயாரிப்பாளரால் நேற்று ஒரே நாளில் புரட்ட முடியாமல் போயிருக்கிறது. இப்படத்தில் நடித்ததற்காக சசிகுமாருக்குக் கூட அட்வான்ஸ் தவிர்த்து பேசிய மீதித் தொகையைத் தரவில்லையாம். இருந்தாலும் பட வெளியீட்டிற்காக அவர் கூட அந்தப் பணத்தைக் கேட்கவில்லை என்கிறார்கள்.
நல்ல படங்களை மட்டுமே எங்களது நிறுவனத்தில் தயாரிப்போம் என்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்தார் தயாரிப்பாளர். சில மோசமான படங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் வெளியாகும் நிலையில், இப்படி ஒரு எண்ணம் கொண்ட தயாரிப்பாளரின் படம் இப்படி சிக்கலில் மாட்டியுள்ளதே என கோலிவுட்டில் வருத்தப்படுகிறார்கள்.