வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ராஜமவுலி இயக்கத்தில் கீரவாணி இசையமைப்பில், பிரபாஸ், ராணா டகுபதி, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2015 ஜூலை 10ம் தேதி வெளிவந்த படம் 'பாகுபலி'. இந்திய சினிமாவை மட்டுமல்ல உலக சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திரைப்படம்.
அப்படம் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று படக்குழுவினர் பலரும் தங்களது நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்கள். இதனிடையே, படக்குழுவினர் நேரில் சந்தித்து ரீ-யூனியன் செய்துள்ளனர்.
தயாரிப்பாளர்கள், இயக்குனர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி, பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டவர்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர். தமன்னா, அனுஷ்கா ஆகியோர் வரவில்லை. இப்படி ஒரு ரீயூனியனைப் பார்ப்பதற்கு மகிழ்வாக உள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து அக்டோபர் 31ம் தேதி வெளியிட உள்ளார்கள்.