தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் படங்களை வெளிநாட்டில் வெளியிடும் பிரைடே என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'டிராக்டர்'. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ் யந்த்ரா ஏற்கனவே “குடியம் குகைகள்” மற்றும் “இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை” ஆகிய ஆவணப்படங்களால் அறியப்பெற்றவர். இது அவரது முதல் திரைப்படம் இது.
படத்தில் நடித்துள்ள நாயகன் பிரபாகரன் ஜெயராமன் மற்றும் நாயகி ஸ்வீதா பிரதாப், பிள்ளையார்பட்டி ஜெயலட்சுமி, சிறுவன் கோவர்தன் உள்ளிட்ட அனைவருமே புதுமுகங்கள். கவுதம் முத்துசாமி ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ரமேஷ் யந்த்ரா கூறும்போது “நமது விவசாயிகளின் படிப்பறிவு இல்லாத நிலையை பயன்படுத்தியும், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என சொல்லி தனியார் கம்பெனிகள் செய்துவரும் ஏமாற்று வேலைகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமான நமது விவசாயத்தை இன்றைய கார்பரேட் நிறுவனங்கள் எப்படி அழிக்கின்றன என்பதை மக்களுக்கு உரக்கச் சொல்ல வரும் இந்த டிராக்டர் படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது” என்றார்.