படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா 2' படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு கோடிக் கணக்கில் பணம் செலவு செய்து தயாரிப்பாளர்கள் விளம்பரம் செய்திருந்தார்கள். ஆனால் அதை விட பெரிய விளம்பரத்தை, அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவம் கொடுத்திருக்கிறது. இப்படியே போனால் படம் 2 ஆயிரம் கோடி வசூலித்து விடும் என்கிறார்கள்.
படம் வெளியாவதற்கு முதல் நாள் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் வெளியான படத்தை பார்க்க அல்லு அர்ஜுன் நேரடியாக சென்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்தார். அவரது மகன் ஆஸ்பத்திரியில் ஆபத்தான் முறையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அல்லுஅர்ஜுனை கைது செய்தனர், 14 மணி நேரத்திற்கு பிறகு அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அல்லு அர்ஜுனின் ஜாமினை எதிர்த்து தெலுங்கானா போலீசார் உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர்.
தெலுங்கானா முதல்வரும் இந்த விஷயத்தில அல்லு அர்ஜூனை நேரடியாகவே எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் ஐதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அல்லு அர்ஜுன் வீட்டின் மீது நேற்று மாலை ஒரு கும்பல் திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. மேலும் தக்காளியையும் வீசி எறிந்தனர். இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த பூந்தொட்டிகள் சேதம் அடைந்தன. மேலும் அவர்கள் அல்லு அர்ஜுனுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். அர்ஜுன் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதல் நடந்தபோது அல்லு அர்ஜுன் வீட்டில் யாரும் இல்லை.