சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா உள்ளிட்ட பல நடிகைகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடிகர்கள் தற்கொலை என்பது மிகவும் அபூர்வமானது. அதில் மிகவும் முக்கியமானது ஸ்ரீநாத்தின் தற்கொலை. மலையாள படங்களில் நடித்து வந்த ஸ்ரீநாத் 'ரயில் பயணங்கள்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். டி.ராஜேந்தர் இயக்கிய இந்த படத்தில் அவருடன் ஜோதி நாயகியாகவும், ராஜிவ் வில்லனாகவும் நடித்திருந்தனர்.
காதல் தோல்வியை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் ஸ்ரீநாத் காதலில் தோற்று சோகமான வாழ்க்கை வாழ்பவராக நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு பிறகு சின்ன முள் பெரிய முள், கள் வடியும் பூக்கள், பூவிழி வாசலிலே படங்களில் மட்டுமே நடித்தார் ஆனால் மலையாளத்தில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததார்.
2010ம் ஆண்டு 'சிகார்' என்ற படத்தில் நடித்தார். இதன் படப்பிடிப்பிற்காக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தபோது அங்கு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினைகள் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அவரது மரணம் தமிழ், மலையாள சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.