துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் ' அமரன்'. சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்தனர். வீரமரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி இப்படம் வெளிவந்தது. இப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷின் 55வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதனை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனமான டி சீரியஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி பான் இந்தியா படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிறுவனம் ஹிந்தியில் அட்ராங்கி ரே, அனிமல், கபீர் சிங், ஆதிபுருஷ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.