ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
துணை நடிகராக பல படங்களில் நடித்த சுகுமார் 'காதல்' படத்தில் நாயகன் பரத்திற்கு நண்பராக நடித்ததன் மூலம் புகழ்பெற்று 'காதல் சுகுமார்' ஆனார். கலகலப்பு, பொன்னான நேரம், விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். திருட்டு விசிடி உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ளார். தற்போது 'முருகப்பா' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சுகுமார் மீது, துணை நடிகை ஒருவர் வடபழனி போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் “நான் துணை நடிகையாக இருக்கிறேன். கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறேன். சினிமாவில் நடிக்கும்போது எனக்கு அறிமுகமான காதல் சுகுமார் என்னோடு நெருக்கமாக பழகினார். பின்னர் காதலித்தார். திருமணம் செய்வதாக கூறி என்னோடு குடும்பம் நடத்தினார். அவ்வப்போது என்னிடமிருந்து பணம், நகைகளை வாங்கினார்.
கடந்த 3 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார். தனக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது என்று கூறி திருமணத்திற்கு மறுத்து வருகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனது பணம், நகைளை திருப்ப பெற்றுத் தரவேண்டும்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.