ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு நடிகை நிதி அகர்வால் தமிழில் 'ஈஸ்வரன், கலகத்தலைவன்' உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக பல படங்களில் நடித்து வந்த இவர் கடந்த சில வருடங்களாகவே பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் 'ஹரிஹர வீர மல்லு' படமும் மற்றும் பிரபாஸ் நடிக்கும் 'ராஜா சாப்' படத்திலும் மட்டுமே கதாநாயகியாக நடித்து வருகிறார். எதற்காக இவருக்கு வாய்ப்பு வரவில்லை என்கிற காரணத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நிதி அகர்வால்.
அதாவது 2021 கோவிட்டுக்கு முன்பாக ஹரிஹர வீரமல்லு படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமான நிதி அகர்வால் அப்போது பவன் கல்யாணின் அரசியல் பயணம் மற்றும் கோவிட் ஆகியவை காரணமாக எப்போதெல்லாம் பவன் கல்யாணுக்கு படப்பிடிப்பு இருக்கிறதோ அப்போதெல்லாம் இவர் வந்து நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளாராம். அதனால் வேறு படங்களில் நடிக்க கால்ஷீட் கேட்டு வந்தபோது சரியான தேதிகளை கொடுக்க முடியாததால் அந்த பட வாய்ப்புகளை இழந்தேன் என கூறியுள்ளார்.
ஆனால் ஹரிஹர வீரமல்லு படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் ராஜா சாப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு அவரை தேடி வந்தது. அப்போது பட தயாரிப்பு நிறுவனத்திடம் நிலைமையைச் சொல்லி அந்த படத்தில் நடிக்க அனுமதி கேட்டபோது ஏதோ பெரிய மனதுடன் அந்த படத்தில் நடிக்க அனுமதித்தார்களாம். இதனால் ஹரிஹர வீரமல்லுவின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்துள்ளனர் என்று கூறியுள்ளார். இதனால் தற்போது இரண்டு படங்களின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத், விஜயவாடா என்று மாறிமாறி பயணித்து நடித்து வருகிறாராம் நிதி அகர்வால்.