ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
மும்பையில் பாலிவுட்டின் பிரபல நடிகர் சைப் அலிகான் வீட்டுக்குள் நள்ளிரவில் நுழைந்த கொள்ளையன் அவரை, ஆறு முறை கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடி கேமரா அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சைப் அலிகானின் மனைவியும், நடிகையுமான கரீனா கபூர் வெளியிட்ட பதிவில், ‛‛இந்தநாள் நம்ப முடியாத அளவுக்கு சவாலாக எங்கள் குடும்பத்திற்கு இருந்திருக்கிறது. நடந்த சம்பவத்தை எங்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இந்த கடினமான சூழலில் யூகங்களை தவிர்க்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ச்சியாக அதுபோன்ற செய்திகள் வருகின்றன. இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினால் அது எங்களது பாதுகாப்பிற்காக அச்சுறுத்தலாக அமையும். இதிலிருந்து நாங்கள் வெளியே வர ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். எங்களுக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.
தப்பிய கரீனா
இதனிடையே சம்பவம் நடந்த அன்று கரீனா கபூர் வீட்டில் இல்லை என தெரிய வந்துள்ளது. அன்றை தினம் அவரது தனது சகோதரி கரீஷ்மா கபூர், நடிகை சோனம் கபூர் ஆகியோருடன் பார்ட்டியில் இருந்ததாக தெரிகிறது. ஒருவேளை அன்று அவரும் வீட்டில் இருந்திருந்தால் இவரும் அந்த சம்பவத்தில் காயம் அடைந்திருப்பார் என சொல்கிறார்கள்.