படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

துபாயில் நடைபெற்ற '24H' கார் ரேஸில் ஒரு பிரிவில் நடிகர் அஜித்தின் “அஜித்குமார் ரேஸிங்” அணி மூன்றாவது இடத்தை பெற்றது. இதையடுத்து அஜித்துக்கும் அவரது அணிக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது போர்ச்சுக்கலில் நடக்கவுள்ள மற்றொரு ரேஸ் போட்டியில் அஜித் தனது அணியினருடன் பங்கேற்க சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே துபாய் கார் ரேஸ் நிறைவுக்கு பிறகு யூடியூப் சேனல் ஒன்றிற்கு அஜித் அளித்த பேட்டி, தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறுகையில், ''சென்னையில் இரவு நேர கார் பந்தயத்தை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி நடத்தியது வரவேற்கத்தக்கது. நமது நாட்டில் கார் பந்தயங்களுக்கு அது மிகவும் உந்துசக்தியாக அமைந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எனக்கு அளித்த ஆதரவுக்கும் நன்றி'' எனக் கூறினார்.