சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ் சினிமாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆறு நேரடி தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. தெலுங்கு சினிமாவில் மகர சங்கராந்தியை முன்னிட்டு மூன்றே மூன்று படங்கள் மட்டுமே வெளிவந்தன. ஜனவரி 10ல் 'கேம் சேஞ்ஜர்', 12ல் 'டாகு மகாராஜ்', 14ல் 'சங்கராந்திகி வஸ்துனம்' ஆகிய படங்கள் வந்தன.
அவற்றில் முதலில் வந்த 'கேம் சேஞ்ஜர்' படம் முதல் நாளிலேயே 186 கோடி வசூலைப் பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், ஒரு வாரத்தில்தான் அப்படம் அந்த வசூலைப் பெற்றதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 200 கோடி வசூலைக் கடந்துள்ள இப்படம் இன்னும் 125 கோடி வசூலைக் கடந்தால்தான் வியாபார ரீதியாக வெற்றி பெற முடியும் என்கிறார்கள்.
அதேசமயம் 'டாகு மகாராஜ்' படம் 100 கோடி வசூலை கடந்துள்ளது. இன்னும் சில கோடி வசூலித்தால் வெற்றிப் பட வரிசையில் இணைந்துவிடுமாம். 'சங்கராந்திகி வஸ்துனம்' படம் 100 கோடி வசூலைக் கடந்து போட்ட முதலீட்டையும் எடுத்துவிட்டு, தற்போது லாபக் கணக்கில் நுழைந்துவிட்டதாம். இரண்டு சீனியர் ஹீரோக்களின் படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது தெலுங்குத் திரையுலகத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.