சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி |
மாதவன் நடித்த ‛மின்னலே' படத்தில் இயக்குனரானவர் கவுதம் மேனன். அதையடுத்து 2003ல் சூர்யா நடிப்பில் ‛காக்க காக்க' என்ற படத்தை இயக்கினார். இந்த படம் சூர்யாவின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. அதையடுத்து 2008ம் ஆண்டில் ‛வாரணம் ஆயிரம்' என்ற படத்தையும் சூர்யா நடிப்பில் இயக்கினார் கவுதம் மேனன். அதன் பிறகு அவர்கள் இருவரும் இணையவில்லை.
இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் ‛டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார் கவுதம் மேனன். அந்த படம் ஜனவரி 23ம் தேதி திரைக்கு வருகிறது. அடுத்தபடியாக விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார். இந்த நேரத்தில் கவுதம் மேனன் அளித்துள்ள ஒரு பேட்டியில், காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களுக்கு பிறகு சூர்யாவுடன் மீண்டும் இணையாதது குறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛துருவ நட்சத்திரம் படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம்தான் சொன்னேன். ஆனால் அந்த கதையில் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அதன் காரணமாகவே நாங்கள் மீண்டும் இணையவில்லை. அவரை வைத்து காக்க காக்க, வாரணம் ஆயிரம் என்ற இரண்டு வெற்றி படங்களை கொடுத்திருக்கிறேன். அதற்காகவாவது அவர் என்னை நம்பி இருக்கலாம். அவர் துருவ நட்சத்திரத்தில் நடிக்க மறுத்தது எனக்கு பெரிய வருத்தத்தை கொடுத்தது'' என்று கூறியிருக்கிறார் இயக்குனர் கவுதம் மேனன்.