‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் |
பல கோடி ரூபாய் செலவில் தயாரான படம் வசூலை அள்ளித் தரும் என எதிர்பார்த்த நிலையில் சில கோடி ரூபாய் செலவில் தயாரான படம் வசூலை அள்ளித் தருகிறது. இப்படி நடப்பது தெலுங்குத் திரையுலகத்தில். விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்த தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் இந்த பொங்கலுக்கு இரண்டு தெலுங்குப் படங்கள் வெளிவந்தன.
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்க 'கேம் சேஞ்ஜர்', அனில் ரவிப்புரடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்க 'சங்கராந்திகி வஸ்துனம்'. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி பான் இந்தியா படமாக வெளியான 'கேம் சேஞ்ஜர்' படம் இன்னும் 200 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளது. அதே சமயம் 50 கோடி செலவில் தயாராகி தெலுங்கில் மட்டுமே வெளியான 'சங்கராந்திகி வஸ்துனம்' படம் 200 கோடி வசூலைக் கடந்துவிட்டது.
தெலுங்கில் வெளியான ஒரு பிராந்தியத் திரைப்படம் ஒரே வாரத்தில் 203 கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.