பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த 2000ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி நடித்து வெளிவந்த படம் 'அலைபாயுதே'. இப்படம் இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட மணிரத்னம் அலைபாயுதே படத்தின் ரகசியம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதன்படி, "நான் அலைபாயுதே படத்தை ஷாருக்கான் மற்றும் கஜோலை வைத்து இயக்க தான் முதலில் திட்டமிட்டிருந்தேன். ஷாருக்கானும் இந்தக் கதைக்கு ஓகே சொல்லியிருந்தார். ஆனால், இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் எப்படி அமைய வேண்டும் என்பது அப்போது எனக்கு சரியாக தெரியவில்லை. அதனால், அலைபாயுதே படத்தை எடுக்காமல், 'தில் சே' படத்தை இயக்கினேன். தில் சே படத்திற்கு பிறகு தான், அலைபாயுதே கதையில் எது மிஸ் ஆனது என்பதை கண்டுபிடித்தேன்" என தெரிவித்துள்ளார். மேலும், அலைபாயுதே படம் ஹிந்தியில் 2002ம் ஆண்டு 'சாத்தியா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதனை ஷாட் அலி இயக்க விவேக் ஓபராய் - ராணி முகர்ஜி நடித்திருந்தனர்.