தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, ஹிந்தி சினிமாவிலும் மணிரத்னம் இயக்கும் படம் என்றால் நடிப்பதற்கு பலரும் தயாராக இருப்பார்கள். ஆனால், அவரது படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை சாய் பல்லவி மறுத்துவிட்டார் என்ற தகவல் ஒன்று கோலிவுட்டில் சுற்றி வருகிறது. 'தக் லைப்' படத்தை அடுத்து மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் இருந்து வருகிறார்.
அப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்துள்ளதாகச் சொல்கிறார்கள். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவியை நடிக்க வைக்க அவரை அணுகியுள்ளார்கள். பொதுவாக மணிரத்னம் அவரது அலுவலகத்திற்குத்தான் நடிகர்கள், நடிகைகளை அழைத்து கதை சொல்லுவார். ஆனால், சாய் பல்லவி அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். இதனால், வேறு ஒருவரை அனுப்பி சாய் பல்லவியிடம் கதை சொல்ல வைத்திருக்கிறார்கள். கதையைக் கேட்ட சாய் பல்லவி, படத்தில் அக்கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்று சொல்லி நடிக்க மறுத்துவிட்டாராம்.
இப்படி சுற்றி வரும் தகவல் உண்மையா என்பது ஆச்சரியமாகவே உள்ளது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஷாரூக்கான் என சீனியர் நடிகர்கள் மணிரத்னம் அழைத்தாலே போய்ச் சென்று பார்ப்பார்கள். அப்படியிருக்க சாய் பல்லவி அதை பாலோ செய்யாமல் இருப்பாரா என்றும் கோலிவுட்டில் கேள்வி எழுப்புகிறார்கள்.