400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் |
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். திருமண வாழ்க்கை முறிவிற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து வந்தார் சமந்தா. இதற்கு அவரின் உடல்நிலையும் ஒரு காரணம். அவருக்கு ஏற்பட்ட தசை அழற்சி பிரச்னையால் சில காலம் சிகிச்சையில் இருந்தார். இருப்பினும் கதையின் நாயகியாக யசோதா, சாகுந்தலம் போன்ற படங்களிலும், சிட்டாடல் போன்ற வெப்சீரிஸிலும் நடித்தார். தற்போது படம் மற்றும் வெப்சீரிஸில் நடிக்கிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட சமந்தா கூறியதாவது, "தொடர்ந்து படங்களில் நடிப்பது சுலபம். ஆனால் நான் எனது ஒவ்வொரு படத்தையும் கடைசி படம் போல் நடிக்க விரும்புகிறேன். இனிமேல் சவாலான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பேன். ஒரு படத்தை தேர்ந்தெடுத்துக்கும் போது பலவிதமாக யோசித்து முடிவெடுக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.