ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்த படம் அமரன். இந்த படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்ட கதையில் உருவானது. இந்த நிலையில் தற்போது சுதா கெங்கரா இயக்கும் பராசக்தி என்ற படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் ரவி மோகன் வில்லனாகவும், ஸ்ரீ லீலா கதாநாயகியாகவும், அதர்வா முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார்கள்.
இந்த பராசக்தி படம் 1965களில் நடந்த கதைக் களத்தில் உருவாகிறது. அதாவது 1965ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்து தீக்குளித்த இளைஞர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது மற்றும் மதுரையில் ஹிந்தி மொழிக்கு எதிராக போராடிய மாணவர்களின் மீது தடியடி நடத்திய அரசை கண்டித்தும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்தி உள்ளார்கள். அந்த பேரணியின்போது மாணவர்கள் மீது காவல் காவல்துறையினர் தடியடி நடத்தியபோது, ராசேந்திரன் என்ற மாணவரின் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரழந்துள்ளார்.
இந்த மொழிப் போரில் உயிரிழந்த ராசேந்திரனுக்கு 1969ம் ஆண்டில் அவரது தியாகத்தை நினைவூட்டும் வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திருவுருவச் சிலை திறந்து வைத்துள்ளார். மொழிப்போர் தியாகியான இந்த மாணவர் ராசேந்திரனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து தான் தற்போது சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படம் உருவாகிறது.
இதில், ராசேந்திரன் என்ற வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அந்த வகையில் அமரன் படத்தை போலவே இந்த படமும் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகிறது.