ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கேரளாவில் கொச்சியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவன் மிஹிர் முகமது என்பவர் தனது சக மாணவர்கள் சிலரால் கிண்டல் கேலிக்கு ஆளாக்கப்பட்டு தாக்குதலுக்கும் ஆளாகி அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டான். இந்த நிகழ்வு கேரளாவில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவையும் தாண்டி பல பிரபலங்கள் இறந்து போன மாணவனுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் இந்த நிகழ்வு குறித்து தங்களது கடும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவில், “இந்த 2025ல் இன்னொரு இளம் உயிரை நாம் இழந்துள்ளோம். சிலரது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, ஆணவம் காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இதுபோன்று மனரீதியாக, உணர்வு ரீதியாக, சில சமயம் உடல் ரீதியான இது போன்ற துன்புறுத்தல்களும் கொடுமைப்படுத்தலும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதை வெறும் இரங்கல்களுடன் கடந்து செல்ல கூடாது. நிச்சயம் நடவடிக்கை தேவை. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதன் அடி ஆழத்திலிருந்து விசாரிப்பார்கள் என நம்புகிறேன். மிஹிர் முகமதுக்கு நீதி வேண்டும் என்று கூறியுள்ளார்.