தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த ஆண்டில் மலையாளத்தில் ஹனிப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடித்து வெளிவந்த படம் 'மார்கோ'. இப்படம் முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்க ஆக்சன் படமாக வெளியாகி உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. ஏற்கனவே மார்கோ 2ம் பாகம் உருவாகிறது என அறிவித்துள்ளனர்.
தற்போது உன்னி முகுந்தன் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "இந்தியாவின் அதீத வன்முறையான ஆக்சன் படம் என்பதை நாங்கள் வெளிப்படையாக கூறி விளம்பர படுத்தியது கூட அதற்கான ரசிகர்களிடம் சென்றடையும் என்பதால் தான். அதனால் மார்கோ படத்திற்கான ரசிகர்கள் அடுத்த பாகத்திற்கு என்ன எதிர்பார்த்து வருவார்கள் என்பதையெல்லாம் சரியாகக் கணித்து பிரஷரை ஏற்றிக் கொள்ளாமல் மார்கோ 2 கதையை உருவாக்க வேண்டும். அதற்காக முழு உழைப்பைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். " என தெரிவித்துள்ளார்.