பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

அதர்வா நடிக்கும் புதிய படத்திற்கு 'இதயம் முரளி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பு விழா சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. இந்த விழாவில் அதர்வா பேசியதாவது :
நீண்ட நாட்களுக்கு பிறகு காதல் படத்தில் நடித்திருக்கிறேன். காதலர் தினத்தில் படத்தின் டைட்டில் மாணவர்கள் முன்னிலையில் வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அருகில் உள்ள இன்னொரு கல்லூரியில்தான் படித்தேன். அதனால் மாணவர்களின் மனது எனக்குத் தெரியும். காதலை போன்றே வலிமையானது ஒரு தலை காதலும். ஒரு தலை காதலை கடந்துதான் எல்லோரும் வந்திருக்கிறோம்.
இதயம் முரளி என்பது எனது தந்தையை நினைவூட்டுவதாக இருந்தாலும் அந்த நோக்கத்திற்காக வைக்கவில்லை. கதைக்கு பொருத்தமான தலைப்பாகவும் இருந்தது. இதயம் முரளி என்பது தனிப்பட்ட ஒரு கேரக்டர் அல்ல. எல்லோருக்குள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் இந்த படம்.
நான் நிறைய இடைவெளி விடுவதாக சொல்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இனி அடுத்தடுத்து புதிய பட அறிவிப்புகளை வெளியிடுவேன். காதலர் தினத்தில் நான் சொல்வது எல்லோரும் காதலியுங்கள் அது வெற்றி பெறலாம், தோற்கலாம். ஆனால் வாழ்க்கையில் காதல் முக்கியம். என்றார்.
இந்த படத்தில் அதர்வாவுடன் பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், பிரக்யா நக்ரா, நிஹாரிகா, ரக்ஷன், நட்டி உள்பட பலர் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார். ஆகாஷ் பாஸ்கர் தயாரித்து, இயக்குகிறார். கோடை விடுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.