சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'விடுதலை' படம் மாற்றத்திற்காக ஆயுதமேந்தி போராடிய நக்சலைட்டுகளை பற்றியதாக இருந்தது. இதில் நக்சலைட் தலைவர் வாத்தியாராக விஜய்சேதுபதி நடித்திருந்தார். அவரை கைது செய்யும் கான்ஸ்டபிளாக சூரி நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு முன்னோடிய அமைந்த படம் 'அனல் காற்று'. இதனை நாடக எழுத்தாளரான கோமல் சாமிநாதன் இயக்கினார். அவர் நடத்தி வந்த 'சுவர்க்கபூமி' என்ற நாடகம்தான் 'அனல் காற்று' படமானது. இதில் நக்சலைட் தலைவராக ராஜேஷ் நடித்திருந்தார். போலீசை மற்றும் அதிகார மையத்தை எதிர்த்து போராடுவதும், போலீசிடமிருந்து தப்பிக்க தலைமறைவு வாழ்க்கை வாழ்வதும் என அந்தக் கால வாத்தியாராக நடித்தார்.
நக்சலைட் இயக்கத்தில் இணைந்து பின்னர் அதன் போக்கு பிடிக்காமல் விலகும் கதாபாத்திரத்தில் வனிதா நடித்தார். டெல்லி கணேஷ் அகிம்சை வழியில் போராடும் சமூக சேவகராக நடிடித்திருந்தார். படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார்.
'விடுதலை' படம் நக்சல்பாரிகளை ஹீரோக்களாக சித்தரித்தது. 'அனல் காற்று' மக்கள் சக்தி மூலமே மாற்றத்தை கொண்டு வர முடியும், நல்சல்பாரிகள் தனிமனித கொலையாளிகள் என்றது. இதுதான் இரண்டு படங்களுக்குமுள்ள முக்கிய வித்தியாசம். படம் 1983ம் ஆண்டு வெளிவந்தது.