வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்துள்ள படம் மாவீரன். இந்த படம் 50 கோடி வசூலை தாண்டி உள்ளது. அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கேட்கும் அந்த குரலுக்கு விஜய் சேதுபதி தான் குரல் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய சிவகார்த்திகேயன், ‛‛எனக்கும், விஜய்சேதுபதிக்கும் எந்த போட்டியும் இல்லை. அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன். அது விரைவில் நடைபெற வாய்ப்புள்ளது. மாவீரன் படத்தில் அவர் கொடுத்த குரலுக்கு ஒரு பைசா கூட விஜய் சேதுபதி சம்பளம் பெறவில்லை என்று கூறினார்.
அதையடுத்து அவர்கள் இணையும் படம், மாவீரன் படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் அடுத்த படமாக கூட இருக்குமோ என்கிற யூகங்கள் எழுந்துள்ளன.