வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தமிழ் நடிகர்களிலேயே அதிக அளவில் நட்புக்காக பல படங்களில், சில நிமிடங்கள் மட்டுமல்ல, சில நொடிகள் கூட வந்து போகும் கதாபாத்திரங்களில் தயங்காமல் நடித்து கொடுப்பவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான தொடரும் திரைப்படத்தில் வெறுமனே சுவரில் தொங்கவிடப்பட்டுள்ள போட்டோவில் தெரியும் புகைப்படமாக மட்டுமே சில காட்சிகளில் நட்புக்காக நடித்தார் விஜய் சேதுபதி.
தொடரும் படம் பார்த்த பலருக்கும் விஜய் சேதுபதியின் இந்த சிறப்பு தோற்றம் மற்றும் இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்த பாரதிராஜா, நடிகர் இளவரசு ஆகியோரின் வருகை ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் அளித்திருக்கும். இந்த படத்தில் ஷோபனாவுக்கு ஜோடி என்கிற விதமாகத்தான் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. படத்தில் பாரதிராஜா என்கிற ஸ்டன்ட் மாஸ்டரிடம் உதவியாளர்களாக மோகன்லாலும், விஜய்சேதுபதியும் பணிபுரியும் போது நட்பாக இருக்கிறார்கள் என்றும் விஜய்சேதுபதியின் மரணத்திற்கு பிறகு ஷோபனாவை மோகன்லால் மறுமணம் செய்து கொண்டு கேரளாவிற்கு அழைத்து செல்கிறார் என்றும் கதை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மோகன்லால் இந்த படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் இளம் பருவ மோகன்லால் உடலில் ரோப் கட்டி சண்டை காட்சிக்கு தயாராவது போலவும் அதை விஜய் சேதுபதி அவருக்கு கட்டி விடுவது போலவும் அருகில் பாரதிராஜா நின்று மேற்பார்வை பார்ப்பது போலவும் இடம் பெற்றுள்ளது. இதில் விஜய்சேதுபதி தவிர பாரதிராஜா மற்றும் மோகன்லால் ஆகியோரின் இளம் உருவங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்றே தெரிகிறது. இந்த புகைப்படத்தை தானும் பகிர்ந்து கொண்டுள்ள விஜய்சேதுபதி, “மாமனிதர் மோகன்லாலுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.