கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
ஆஸ்கர் மற்றும் கேன்ஸ் போன்ற சர்வதேச திரைப்பட திருவிழாக்களில் தங்கள் படங்கள் இடம் பெறுவதை பெருமையாக நினைப்பவர்கள் ஒரு பக்கம் என்றால், அந்த விழாவில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதுவே பெரிய பாக்கியம் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் கன்னட நடிகையான திஷா மதன் என்பவர் தற்போது நடைபெற்று வரும் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார். அங்கே ரெட் கார்பட் வரவேற்பில் இவர் காஞ்சிபுரம் சேலை அணிந்து அதேசமயம் மாடர்னாக வலம் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்திலும் இவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த காஞ்சிபுரம் சேலையை செட்டிநாடு பகுதியைச் சேர்ந்த நான்கு நெசவாளர்கள் கிட்டத்தட்ட 400 மணிநேரம் வேலை செய்து கை வேலைப்பாட்டில் உருவாக்கினார்களாம். இதற்காக 1950களில் செட்டிநாடு வீட்டு திருமணத்தில் மணப்பெண்ணுக்கு உருவாக்கப்படும் திருமண பட்டுச் சேலையின் வடிவமைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த திஷா மதன் 2020ல் வெளியான பிரெஞ்ச் பிரியாணி என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார். இதுதவிர வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். அவ்வளவுதான் இவருக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள எப்படி வாய்ப்பு கிடைத்தது என கன்னட திரையுலகை சேர்ந்தவர்கள் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.