ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா. கர்நாடக மாநிலம் கூர்க்-கைச் சொந்த ஊராகக் கொண்டவர். கன்னட சினிமாவில் நடித்து பின் தெலுங்கில் அறிமுகமாகி அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது ஹிந்தியிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்து வருகிறார். அவரது நடிப்பில் நேற்று வெளியான ஹிந்திப் படமான 'சசாவா' நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ரஷ்மிகா பேசும் போது தன்னை ஹைதராபாத்தில் இருந்து வந்தவர் என்று குறிப்பிட்டுப் பேசினார். அது கன்னட மக்களை கோபப்படுத்தி உள்ளது. எங்கு சென்றாலும் தனது பூர்வீகத்தை ரஷ்மிகா மறக்கக் கூடாது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சொந்த ஊரை விட்டு ஹைதராபாத்தில் செட்டிலாகி உள்ளார் ரஷ்மிகா. அதனால்தான் அவர் அப்படிப் பேசியுள்ளார் என்றும் சிலர் ரஷ்மிகாவிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு, ஹிந்தியில் மட்டுமே நடிக்க ரஷ்மிகா ஆர்வம் செலுத்தி வருவதும் கன்னட ரசிகர்களின் கோபத்திற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.