படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா. கர்நாடக மாநிலம் கூர்க்-கைச் சொந்த ஊராகக் கொண்டவர். கன்னட சினிமாவில் நடித்து பின் தெலுங்கில் அறிமுகமாகி அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது ஹிந்தியிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்து வருகிறார். அவரது நடிப்பில் நேற்று வெளியான ஹிந்திப் படமான 'சசாவா' நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ரஷ்மிகா பேசும் போது தன்னை ஹைதராபாத்தில் இருந்து வந்தவர் என்று குறிப்பிட்டுப் பேசினார். அது கன்னட மக்களை கோபப்படுத்தி உள்ளது. எங்கு சென்றாலும் தனது பூர்வீகத்தை ரஷ்மிகா மறக்கக் கூடாது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சொந்த ஊரை விட்டு ஹைதராபாத்தில் செட்டிலாகி உள்ளார் ரஷ்மிகா. அதனால்தான் அவர் அப்படிப் பேசியுள்ளார் என்றும் சிலர் ரஷ்மிகாவிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு, ஹிந்தியில் மட்டுமே நடிக்க ரஷ்மிகா ஆர்வம் செலுத்தி வருவதும் கன்னட ரசிகர்களின் கோபத்திற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.