துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
35 வருடங்களை தாண்டி தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு இயக்குனராகவும் நடிகராகவும் வெற்றிகரமாக இரட்டைக் குதிரை சவாரி செய்து வருபவர் இயக்குனர் பார்த்திபன். ஒரு பக்கம் இயக்குனராக வித்தியாசமான படைப்புகளை தந்து, சில சமயம் சறுக்கலை சந்தித்தாலும் இன்னொரு பக்கம் நடிகராக அதை சமன் செய்து தொடர்ந்து பயணப்பட்டு வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தற்போது கவனம் செலுத்த துவங்கியுள்ளார் பார்த்திபன். இதற்குமுன் 2012ல் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் வெளியான 'ரச்சா' என்கிற படத்தில் மட்டும் நடித்துள்ள பார்த்திபன் தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்ல கடந்த 2001ல் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் வெளியான 'நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக' என்கிற படத்தின் மூலம் மலையாளத்தில் நுழைந்த பார்த்திபன், அவர் பிறகு 2011ல் வெளியான 'மேல் விலாசம்' என்கிற படத்தில் கதையின் நாயகனாகவும் 2013ல் வெளியான 'எஸ்கேப் பிரம் உகாண்டா' படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். இந்த நிலையில் 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு 'மிஸ்டர் டுமீல்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.