'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

35 வருடங்களை தாண்டி தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு இயக்குனராகவும் நடிகராகவும் வெற்றிகரமாக இரட்டைக் குதிரை சவாரி செய்து வருபவர் இயக்குனர் பார்த்திபன். ஒரு பக்கம் இயக்குனராக வித்தியாசமான படைப்புகளை தந்து, சில சமயம் சறுக்கலை சந்தித்தாலும் இன்னொரு பக்கம் நடிகராக அதை சமன் செய்து தொடர்ந்து பயணப்பட்டு வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தற்போது கவனம் செலுத்த துவங்கியுள்ளார் பார்த்திபன். இதற்குமுன் 2012ல் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் வெளியான 'ரச்சா' என்கிற படத்தில் மட்டும் நடித்துள்ள பார்த்திபன் தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்ல கடந்த 2001ல் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் வெளியான 'நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக' என்கிற படத்தின் மூலம் மலையாளத்தில் நுழைந்த பார்த்திபன், அவர் பிறகு 2011ல் வெளியான 'மேல் விலாசம்' என்கிற படத்தில் கதையின் நாயகனாகவும் 2013ல் வெளியான 'எஸ்கேப் பிரம் உகாண்டா' படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். இந்த நிலையில் 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு 'மிஸ்டர் டுமீல்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.