சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
நடிகர் பரத் ஹீரோ தாண்டி பிற நடிகர்கள் படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார். சமுத்திரகனி உடன் வீர வணக்கம் படத்தில் நடிப்பவர் அடுத்து சசிகுமார் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். குடும்ப உறவுகளின் வலிமையை உணர்த்தும் விதமாக உருவாகும் இப்படத்தில் மேகா செட்டி, மாளவிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். இவர்களுடன் எம் எஸ் பாஸ்கர், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, இந்துமதி ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்க உள்ளனர். பெயரிடப்படாத இப்படத்தை குரு என்பவர் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 10ம் தேதி அன்று பட்டுக்கோட்டையில் துவங்குகிறது. இதன் படப்பிடிப்பு பட்டுகோட்டை, மன்னார்குடி, முத்துப்பேட்டை, தஞ்சாவூர், வேதாரணியம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.