ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'புஷ்பா 2' படம் மூலம் பான் இந்தியா ஸ்டார் என்பதையும் தாண்டி வசூல் ஸ்டார் என்ற பெயரைப் பெற்றார் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன். அவரது அடுத்த படம் திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கும் படம்தான் என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னணி நடிகர்களின் படங்களை அப்படம் தயாரித்துள்ளது. அந்நிறுவனத்தின தயாரிப்பாளரான நாக வம்சி, சமீபத்திய சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அல்லு அர்ஜுன், திரிவிக்ரம் சீனிவாஸ் படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.
அப்படம் சமூக - புராணப் படமாக இருக்கும் என்றும், இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் படம் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்துள்ளார். 'புஷ்பா 2' படத்தை விடவும் அந்தப் படத்தை பிரம்மாண்ட எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அல்லு அர்ஜுன், த்ரிவிக்ரம் சீனிவாஸ் கூட்டணி ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் இணைகிறது.
அட்லியும் அவரது அடுத்த படத்திற்காக அல்லு அர்ஜுனிடம் பேசி வருவதாகத் தகவல் வெளியானது. ஆனால், அப்படம் இப்போதைக்கு ஆரம்பமாவதாகத் தெரியவில்லை.