'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

சினிமா தொடங்கிய காலத்தில் ராமாயணம், மகாபாரத கதைகளும், அதன் கிளைகதைகளும் படமாகி வந்த நேரத்தில் ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான படம் 'பக்த துளிதாஸ்'. 1937ல் வந்த படத்தை ராஜசந்திரசேகர் இயக்கினார். எம்.கே.ராதா துளசிதாசாக நடித்தார், கே.எஸ்.சபிதா தேவி அவரது மனைவியாக நடித்தார்.
புராண காலத்தில் வட மொழியில் ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, அக்பரின் ஆட்சி காலத்தில் அவரது அமைச்சரவையில் மத ஆலோசகராக இருந்த ஆத்மாராவுக்கு மகனாக பிறந்து, ஹிந்தியில் ராமாயணத்தை இயற்றியதாக இந்த படத்தின் கதை அமைந்திருந்தது.
1947ம் ஆண்டு வெளிவந்த 'பக்த துளிதாஸ்' படத்தை பி.எஸ்.ரங்கா இயக்கினார். பி.எஸ்.ராஜ அய்யங்கர் துளசிராமாக நடித்தார். அவர் மனைவியாக லட்சுமி சங்கர் நடித்தார். இந்த படத்தில் வால்மீகி அத்தினாபுரத்தில் வாழ்ந்த ராம பக்தரான ஆத்மாராவிற்கு மகனாக பிறந்து தமிழில் ராமாயணத்தை எழுதியதாக அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு படங்களுமே வரவேற்பை பெற்றது.