ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமா தொடங்கிய காலத்தில் ராமாயணம், மகாபாரத கதைகளும், அதன் கிளைகதைகளும் படமாகி வந்த நேரத்தில் ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான படம் 'பக்த துளிதாஸ்'. 1937ல் வந்த படத்தை ராஜசந்திரசேகர் இயக்கினார். எம்.கே.ராதா துளசிதாசாக நடித்தார், கே.எஸ்.சபிதா தேவி அவரது மனைவியாக நடித்தார்.
புராண காலத்தில் வட மொழியில் ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, அக்பரின் ஆட்சி காலத்தில் அவரது அமைச்சரவையில் மத ஆலோசகராக இருந்த ஆத்மாராவுக்கு மகனாக பிறந்து, ஹிந்தியில் ராமாயணத்தை இயற்றியதாக இந்த படத்தின் கதை அமைந்திருந்தது.
1947ம் ஆண்டு வெளிவந்த 'பக்த துளிதாஸ்' படத்தை பி.எஸ்.ரங்கா இயக்கினார். பி.எஸ்.ராஜ அய்யங்கர் துளசிராமாக நடித்தார். அவர் மனைவியாக லட்சுமி சங்கர் நடித்தார். இந்த படத்தில் வால்மீகி அத்தினாபுரத்தில் வாழ்ந்த ராம பக்தரான ஆத்மாராவிற்கு மகனாக பிறந்து தமிழில் ராமாயணத்தை எழுதியதாக அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு படங்களுமே வரவேற்பை பெற்றது.