தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்வது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே கில்லி, 3, வாரணம் ஆயிரம், மயக்கம் என்ன, பாபா, பில்லா போன்ற படங்கள் ரீ ரிலீஸ் ஆகி மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க வசூலை பெற்றன.
இந்தநிலையில் வருகின்ற மார்ச் 14ம் தேதி அன்று இரு படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன. கடந்த 2004ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அசின், நதியா, பிரகாஷ்ராஜ் நடித்து வெளிவந்த 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படமும், கடந்த 2016ம் ஆண்டில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடித்து வெளிவந்த 'ரஜினி முருகன்' படமும் ஒரே நாளில் ரீ-ரிலீஸ் ஆவதாக சம்பந்தப்பட்ட படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி இருவரும் தற்போது சுதா இயக்கத்தில் ‛பராசக்தி' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.