ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்வது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே கில்லி, 3, வாரணம் ஆயிரம், மயக்கம் என்ன, பாபா, பில்லா போன்ற படங்கள் ரீ ரிலீஸ் ஆகி மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க வசூலை பெற்றன.
இந்தநிலையில் வருகின்ற மார்ச் 14ம் தேதி அன்று இரு படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன. கடந்த 2004ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அசின், நதியா, பிரகாஷ்ராஜ் நடித்து வெளிவந்த 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படமும், கடந்த 2016ம் ஆண்டில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடித்து வெளிவந்த 'ரஜினி முருகன்' படமும் ஒரே நாளில் ரீ-ரிலீஸ் ஆவதாக சம்பந்தப்பட்ட படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி இருவரும் தற்போது சுதா இயக்கத்தில் ‛பராசக்தி' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.