பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் | 400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? |
இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது அப்போதிருந்த சென்னை மாகாண அரசு போருக்கு ஆதரவான படங்களையும், மக்களை அச்சத்தில் இருந்து மீட்கும் படங்களையும் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதை தொடர்ந்து போரில் இந்திய வீரர்களின் தியாகம், ஆங்கில அரசின் நேர்மையான நிலைப்பாடு இவற்றை மையமாக கொண்டு படங்கள் வந்தன. இந்த படங்களுக்கு இடையே போரின் காரணமாக மக்கள் படும் அவஸ்தை மிக கடுமையான விலையேற்றம் இவற்றை கண்டித்தும், சென்னை மாகாண அரசை கிண்டல் செய்தும் வெளியான படம் 'மிஸ்.மாலினி'.
ஆர்.கே.நாராயண் எழுதிய 'மிஸ்டர் சம்பத்' நாவலை மையமாக வைத்து, கொத்தமங்கலம் சுப்பு திரைக்கதை எழுதி இயக்கி அவரே நாயகனாகவும் நடித்த படம், கதாநாயகி மாலினியாக நடித்தவர் புஷ்பவல்லி. ஜாவர் சீதாராமன், எம்.எஸ்.சுந்தரி பாய், எஸ்.வரலட்சுமி உட்பட பலர் நடித்தனர். இதில்தான் ஜெமினி பிலிம்சில் மானேஜராக இருந்த கணேசன் சிறிய வேடம் ஒன்றில், அறிமுகமானார். பின்னர் அவர் ஜெமினி கணேசன் ஆனார்.
புகழ்பெற்ற நாடக நடிகையான மாலினி ஒரு சாதாரண மனிதனை காதலித்து அவனை மட்டுமே நம்பி வாழ்க்கையை தொலைத்து பின்னர் மீண்டும் நாடகத்திற்கே திரும்பி வருவது மாதிரியான கதை.