விஜய் பிரியா விடை கொடுப்பாரா?, பிரிவு உபசார விழா நடக்குமா? | விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை |

நடிகை மஞ்சிமா மோகன் தமிழில் ‛அச்சம் என்பது மடமையடா, தேவராட்டம், சத்ரியன், களத்தில் சந்திப்போம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் திரைப்படங்களில் பெரிதளவில் நடிக்கவில்லை.
சமீபத்தில் ‛சுழல் 2' வெப் தொடரில் நடித்து அவரின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு பெற்றார். தற்போது அளித்த பேட்டி ஒன்றில், அவர் கூறியதாவது, " என்னால் திரைக்கதை எழுத முடியாது. ஆனால் படங்களை இயக்க ஆசைப்படுகிறேன். எழுத்தாளர் எழுதும் கதையை திரையில் கொண்டு வர முடியும் என நம்புகிறேன். நான் மக்களை உன்னிப்பாக கவனிப்பவள். திரில்லர் படங்களை இயக்குவது எனக்கு கனவு. மனதில் பல கதைகள் இருந்தாலும் அவற்றை எழுத்தில் வடிக்க முடியவில்லை. அடுத்த 5, 6 ஆண்டுகளில் ஒரு படத்தை இயக்குவேன் என்கிற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது." இவ்வாறு தெரிவித்துள்ளார்.