சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'எம்புரான்'. கடந்த 2019ல் இவர்கள் கூட்டணியில் உருவான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். சமீபத்தில் இதன் இயக்குனர் பிரித்விராஜ் ரஜினிகாந்தை சந்தித்து முதல் நபராக அவருக்கு இதன் டிரைலரை போட்டு காட்டினார்.
இந்த நிலையில் மோகன்லால் சபரிமலை சென்று ஐயப்பன் தரிசனம் செய்துள்ளார். இதற்காக பம்பையில் இருந்து அவர் நடந்தே சன்னிதானம் வரை சென்றுள்ளார். மேலும் அவர் மம்முட்டியின் நிஜப்பெயரான முகமது குட்டி என்கிற பெயரை கூறி விசாக நட்சத்திரம் என்று சொல்லி அவர் பெயரிலும் அர்ச்சனை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து ஏற்கனவே அவர் மம்முட்டியுடன் கூறிவிட்டு சென்றதாகவும் அதேபோல அவரது பெயரில் அர்ச்சனை செய்வதற்கு முன்கூட்டியே டோக்கன் பதிந்து இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. நேற்று வழிபாடு நடத்திய மோகன்லால் இன்று காலை மீண்டும் கொச்சிக்கு திரும்புகிறார் என்றும் தெரியவந்துள்ளது. ரிலீஸ் ஆகப்போகும் தனது படத்திற்காக மட்டுமல்லாமல் தனது நண்பரான மம்முட்டிக்காகவும் மோகன்லால் வழிபாடு செய்தது இருதரப்பு ரசிகர்களிடமும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.