தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சென்னையில் சிட் பண்ட் நிறுவனத்தை நடத்தி வரும் நிறுவனம், ஸ்ரீ கோகுலம் சினிமாஸ் என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகிறது. மலையாளத் திரையுலகத்தில் அந்நிறுவனத்தின முதலீடுகள் அதிகம். சமீபத்தில் வெளியான மலையாளத் திரைப்படமான 'எம்புரான்' படத்தின் பங்குதாரராக கடைசி நேரத்தில் சேர்ந்தது.
'எம்புரான்' படத்தில் ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தும் சில காட்சிகள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. அதன்பின் அக்காட்சிகளை நீக்கி மறுதணிக்கை செய்து படத்தை மீண்டும் திரையிட்டனர்.
இந்நிலையில் கோகுலம் நிறுவனத்தின் சென்னையில் உள்ள கோடம்பாக்கம் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
திரையுலகத்தில் அடிக்கடி வருமான வரி சோதனை நடைபெறுவது வழக்கம்தான். ஆனால், தற்போது அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.