படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சில ஆண்டுகளுக்கு முன்பு பிக்பாஸ் தர்ஷன், நடிகை சனம் ஷெட்டிக்கிடையே திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் கடைசி நேரத்தில் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்தார் தர்ஷன். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து தர்ஷனை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் சனம் ஷெட்டி.
இந்த நிலையில், நேற்று பார்க்கிங் பிரச்சினையில் நீதிபதி மகனுடன் ஏற்பட்ட மோதலில் தர்ஷன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது பற்றி இணையப்பக்கத்தில் சனம் ஷெட்டி ஒரு வீடியோ பதிவு போட்டுள்ளார். அதில், தர்ஷனை கைது செய்து விட்டார்கள் என்ற செய்தியை கேட்டதும் ஒரு நொடி எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதேசமயம் தர்ஷன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். விசாரணை கூட நடத்தாமல் ஒரு தரப்பு மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஹாஸ்பிட்டலில் இருந்து பேட்டி கொடுத்த நீதிபதியின் மகன் சொன்னது தான் உண்மை என்றால், அதற்கு ஆதாரமாக சிசிடிவி புட்டேஜை வெளியிடலாமே. இரண்டு பேருக்கும் இடையே மோதல் நடைபெற்று இருக்கும் போது தர்ஷன் மீது மட்டும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்யாத நபர் தண்டனை அனுபவித்தால் அது மிகப்பெரிய குற்றமாகிவிடும் என்று தர்ஷனுக்கு ஆதரவாக தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி.