ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த 25 ஆண்டுகளாக விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நடிகர் ராமராஜன், நடிகை நளினி ஆகியோரை அவர்களது பிள்ளைகள் சேர்த்து வைத்து விட்டதாக ஒரு செய்தியை சோசியல் மீடியாவில் பரவி வந்தது. இந்த நிலையில் அதற்கு நடிகர் ராமராஜன் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அந்த செய்தியில், ''நானும், நளினியும் இணைந்து விட்டோம் என்ற செய்தி உண்மை இல்லை. நடக்காத ஒரு விஷயத்தை பற்றி வதந்தி பரப்பாதீர்கள். நாங்கள் பிரிந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது. தனித்து வாழ்வதற்கு நான் பழகி விட்டேன். அதனால் இது போன்ற வதந்திகளால் நானும், நளினியும் மட்டுமின்றி எங்கள் பிள்ளைகளும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். என்னை பொறுத்தவரை நளினியுடனான உறவு எப்போதோ முடிந்து விட்டது. இனிமேல் நாங்கள் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை. அது ஒரு நாளும் நடக்காது. எனவே தயவுசெய்து யாரும் இது போன்ற செய்திகளை பரப்ப வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார் நடிகர் ராமராஜன்.