இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
1948ம் ஆண்டு ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த படம் 'சக்ர தாரி'. சக்ரத்தை தாங்கி நிற்பவன் என்று இதன் பொருள். அதாவது கிருஷ்ணரை குறிக்கும் சொல்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பண்டர்பூர் என்ற கிராமத்தில் கோரகும்பர் என்ற கிருஷ்ண பக்தர் இருந்தார். சதாசர்வ காலமும் அவர் கிருஷ்ணரையே நினைத்துக் கொண்டு சம்பாதிக்காமல் இருப்பது மனைவிக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் பானை செய்வதற்கு மண் மிதிக்கும்போது தன் குழந்தை காலுக்கு அடியில் விளையாடுவதைகூட மறந்து தன் குழந்தையையும் மிதித்து கொன்று விடுகிறார். அதன்பின் கணவன் மனைவி இடையே நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.
புகழ்பெற்ற இந்த கதை இந்தியாவின் பல மொழிகளில் திரைப்படமானது. தமிழில் 'சக்ர தாரி' என்ற பெயரில் தயாரானது. இதில் கோரகும்பராக சித்தூர் நாகைய்யா நடித்தார். அவரது மனைவியாக புஷ்பவல்லி நடித்தார். ஜெமினி கணேசன் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். எம்.டி.பார்த்தசாரதி இசை அமைத்தார்.
படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டாது. படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு பிறகு படத்தை கேவா கலர் டெக்னாலஜிக்கு மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. அப்போதும் 50 நாட்கள் வரை ஓடியது.